Monday, February 11, 2019

ராவண விழா

19 ஆம் நூற்றாண்டில் திருவாங்கூர் ராஜா ரவி வர்மா வரைந்த ஓவியம் (SITA Under the Ashoka Tree). பிராமணிய தொகுப்பின் நீட்சியான ரவி வர்மா, தென்இந்தியர்களை குரங்காகவும், கருப்பாகவும் வரைந்ததில் ஆச்சரியமில்லை. (நாம் கருப்பர்கள் தான் என்பது வேறு விசயம்). ...........

இங்கிருக்கும் எல்லா மதநம்பிக்கைகளையும் ஆராய்ந்து பதிவு செய்கிறார். இயற்கை வழிபாடு, நாட்டாரியல் வழிபாடு என எல்லாவற்றையும் பதிவு செய்யும், 'ராவண விழா' ஒன்று ஆண்டுதோறும் மதுரைக்கும் கீழே கொண்டாடப்பட்டதை பதிவு செய்கிறார்.

 அதாவது, ராவணன் சீதையை கடத்திவந்த நாளை வருடம் தோறும் 'ஆடி அம்மாவாசைக்கு அடுத்தநாள் ' கொண்டாடியதாக குறிப்பிடுகிறார். மற்றொரு குறிப்பில், ராமனை demon யாக மக்கள் முன்வைத்து வழிபட்டதாகவும் பதிவு செய்கிறார். ............

 'ராவணன் ஜலதோஷம் வந்தா எந்த கை எடுத்து சீந்துவான்?' என்ற கடி ஜோக்குகளை கேட்டு வளர்ந்த எங்களுக்கு, 300 வருடங்களுக்கு முன் அவன் ஒரு வழிபாட்டு மரபினனாக இருந்திருக்கிறான் என்பது ஒரு ஆச்சரியமான செய்தியே. காலம் இப்படி தான், வரலாற்றை தொலைந்தவர்களின் நீட்சிகள், அது தொலைந்த இடத்தில் இருந்தே புதுப்பிப்பார்கள்.

 #திருவாங்கூர்_குறிப்புகள்
 # Edited

No comments:

Post a Comment