Tuesday, April 28, 2009

பிரிவின் கணங்கள்.....

காற்றில் அறுந்த மேக
துண்டுகளை போல்
உனக்கும் எனக்குமான
உறவை உடைத்து 
செல்கிறது காலம்.....

கோடை வெயிலில் தெறித்து
கிடக்கும் நெல் மணியை
கடத்தி செல்லும் ஊர் குருவியாய்
நம் நினைவை
கொத்தி செல்கிறது மனது..

பசி கொண்ட யானையாய்
கொன்று தின்கிறது
மௌனம்
நமக்கான மணி துளிகளை.....

இல்லாமல் இருக்கும்
கடவுளை போல்
நாம் வாழ்ந்த பக்கங்களை
மற்றும் ஓர் முறை
வாசித்து காட்டுகிறது காதல்.....

ஒற்றை கொம்பில் தொங்கி
நிற்கும் தேன் கூடாய்
பெருகும் கண்ணீரோடு
பரிதவித்து நிற்கிறேன் நான்.....

5 comments:

  1. good lines ,
    ஒற்றை கொம்பில் தொங்கி
    நிற்கும் தேன் கூடாய்
    பெருகும் கண்ணீரோடு
    பரிதவித்து நிற்கிறேன் நான்.....

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. each and every lines are good especially last four lines..

    ReplyDelete
  4. no wordings from me to comment about your poems. i could feel, enjoy, etc., arputham avlothan.

    ReplyDelete
  5. வருகைக்கும், விமர்சனத்திற்க்கும் நன்றி வினோ,ஆன்ட்ரியா, கவி

    ReplyDelete