Thursday, January 14, 2010

ஒரு கோப்பைத் தேனீரும் சில நட்பும்..... - உரையாடல் போட்டிக்கவிதை

கற்பாறையின் மேல்
அடிக்கப்படும் துணி
போல் அலசி எடுக்கப்படுகிறது
எனது உணர்வுகள்
அவரவர் விருப்பப்படி

மூங்கிலைப் போல்
பலம் கொண்ட
என் சொற்கள்
முழுமை பெரும் முன்னே
வெட்டி வீழ்த்தப்படுகிறது

யார் என்னோடு
பேச வேண்டும் என்பதை
அரசின் காகிதங்களே
தீர்மானிக்கின்றன..

அதிகார நாற்காலிகளை
தற்காத்துக் கொள்ள
எனது இருப்புத் தொடர்ந்து
நிர்மூலமாக்கப்படுகிறது

இருப்பினும்
வாழ்க்கையைக் கொண்டாட
எப்போதும் மிச்சமிருக்கிறது
ஒரு கோப்பைத் தேனீரும்
சில நட்பும்.....

( உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு நடத்தும்
உரையாடல் கவிதைப் போட்டிக்காக' எழுதியது. )

11 comments:

Andrea said...

choo chweet!!!!!!!

திகழ் said...

நன்றாக இருக்கிறது

வெற்றி பெற வாழ்த்துகள்

Gowripriya said...

வெற்றி பெற வாழ்த்துகள் :))

Baski... said...

nice...

S.A. நவாஸுதீன் said...

வெற்றி பெற வாழ்த்துகள்

கமலேஷ் said...

very nice....
வெற்றிபெற வாழ்த்துக்கள்...

cool boy said...

wow fendastic ma

ஆறுமுகம் முருகேசன் said...

அருமை..

வெற்றி பெற வாழ்த்துகள்.. :)

Sunil said...

fantastic

Elango said...

வாழ்த்துக்கள் ஸ்டாலின்..!

சக்தியின் மனம் said...

ஒரு கோப்பைத் தேனீரும்
சில நட்பும்.....

oru koppayile nam kudi iruppu..

Post a Comment