Tuesday, November 6, 2018

போலீஸை தெறிக்க விட்ட ஜெர்மன் பாட்டி

வடிவேலு ஒரு படத்தில் பேருந்து நடத்துனராக இருப்பார். பேருந்து நிறுத்தத்தில் நிற்கும் போது வெளியே நிற்கும் பாம்பாட்டி, கைப்பையில் இருக்கும் பாம்பை வெளியே எடுத்து சீட் பிடிப்பதற்காக ஜன்னல் வழியே உள்ளே போடுவார். பேருந்தில் ஏறிய மக்கள் அலறி அடித்துக்கொண்டு வெளியே ஓடுவார்கள். இந்த நகைச்சுவைக்கும் சற்றும் குறைவில்லாமல் மேற்கு ஜெர்மனியில் ஒரு சம்பவம் நடந்திருக்கிறது.
லிவர்குசேன் நகரில் வசித்து வந்த அந்த 90 வயது மூதாட்டி திடீரென ஒரு முடிவை எடுத்தார். இரண்டாம் உலகப்போர் நடந்துக்கொண்டிருந்த போது அந்த மூதாட்டியின் கணவர் அந்த பொருளை எங்கிருந்தோ எடுத்துக்கொண்டு வந்திருக்கிறார். கணவர் இறந்தபின் அந்த பொருள் எதற்கு இருக்கிறது என யோசித்த அந்த மூதாட்டி, 70 ஆண்டுகளாக வீட்டு அலமாரியில் வைக்கப்பட்டிருந்த அந்த பொருளை காவல்துறையிடம் ஒப்படைப்பதற்கு முடிவு செய்தார்.
தனது காரில் அந்தப் பொருளை எடுத்துப்போட்டு, அருகில் இருந்த போலீஸ் ஸ்டேஷனில் அவர் கொண்டு சேர்த்திருக்கிறார். அந்த பொருளை பார்த்ததும் தெறித்து அலறிய போலீசார், போலீஸ் ஸ்டேசனையும், அந்த சாலையையும் உடனே காலி செய்திருக்கிறார்கள்.
சுமார் இரண்டு மணி நேர போராட்டத்திற்கும் பின் அந்த பொருள் செயலிழக்க செய்யப்பட்டது. ஆம், அந்த மூதாட்டி கொண்டு கொடுத்த பொருள், இரண்டாம் உலகப்போரில் ரஷ்யாவால் வீசப்பட்ட கிரனைட் குண்டு. வெடிக்காமல் சுமார் எழுபது வருடங்கள் அந்த மூதாட்டியின் வீட்டிலேயே அந்த கிரானைட் இருந்திருக்கிறது.
இந்த சம்பவத்திக்கு பிறகு.லிவர்குசேன் காவல்துறை அவசர அவசரமாக ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டு இருக்கிறது. அதாவது, இது போன்ற பொருள் ஏதேனும் வீட்டில் இருந்தால் உடனே காவல்துறையை அழைக்குமாறும், தன்னிச்சையாக யாரும் குண்டுகளை நேரடியாக போலீஸ் ஸ்டேசனுக்கு கொண்டு வர வேண்டாம் என்றும் அறிவுறுத்தி இருக்கிறது..  😀😀😀

https://www.facebook.com/stalin.felix.5/posts/10156945232347780

No comments:

Post a Comment