Saturday, October 28, 2017

தமிழிசை என்ற வெகுளியான எதிரி

இன்றைய தேதியில், சமூக வலைதளங்களில் அதிகமாக வசைப்பாடப்படும், விமர்சிக்கப்படும் அரசியல்வாதிகள் யாராக இருக்கும்..
1. தமிழிசை 2. ஹச்.ராஜா.............
தமிழிசை, தமிழ்நாடு பிஜேபியின் தலைவர் தான் ; ஆனால், அவர் உளரும் 'தத்து பித்துக்களை' மேலிடத்தில் போட்டுக் கொடுக்க ஆளே இல்லையா?. 'இவர்களை விட மிக கவனமாக மீடியாவுக்கு பூசி மெழுக ஆட்கள் இல்லையா?' இருக்கிறார்கள்.. பிறகு ஏன்?


தமிழக கட்சிகள் அனைத்தும் தனி தனியாக போட்டியிட்டால், இன்று பிஜேபி யின் இடம் எதுவாக இருக்கும்? ஐந்து/ஆறு/எழு..... பிறகு ஏன் மெர்சலுக்கு விஜய்யை, தோழர் திருமாவை என சம்மந்தமே இல்லாமல் இவர்கள் வம்புக்கு இழுக்க வேண்டும்?

எளிமையாக நான் கண்டறியும் முதல் காரணம்..
நாம் பேச வேண்டும், முழுமையாக அவர்களை பற்றி நாம் பேச வேண்டும்.. நாம் பேசி பேசி அவர்களை ஒதுக்க வேண்டும். முடிவில், நம்மை எதிர்ப்பவர்கள் அவர்களை ஆதரிக்க செய்யவேண்டும்.. அவ்வளவே. (இப்போது தமிழகத்தில், அவர்கள் இடம் எதுவாக அமையும் என யோசித்துப் பாருங்கள்).

குமரி மாவட்ட வேட்டை சமூகங்களுக்கு தெரிந்த (நிஜ)கதை தான் இது. காட்டு பன்றியை வேட்டையாட போகும் போது, கூடவே ஒரு சவலை பட்டியையும் (மெலிந்த நாய்) தூக்கிக்கொண்டு போவார்களாம். காட்டுபன்றியை துரத்தி ஒரு பாறை முடுக்கில் கொண்டு செல்லும்போது, முதன்முதலாக அவர்கள் தூக்கி வீசுவது, அந்த 'சவலை பட்டியை'தான்.. இனிமேல், மீளவே வழியில்லை என நினைக்கும் காட்டுப்பன்றி, முதலில் தன் முன்னிருக்கும் அந்த மெல்லிய நாயை தாக்க முயலும். அந்த நாயை, காட்டுப்பன்றி தாக்கும் தருணத்தில், அந்த பன்றியை வேட்டைக்காரர்கள் கொன்றிருப்பார்கள்.
இப்போது, நாம் விவாதிக்கும் தமிழக அரசியலோடு இந்த நிகழ்வுகளை தொடர்பு படுத்திப் பாருங்கள் விடை கிடைக்கும்.. ஏன் கே.டி ராகவன்கள், நாராயணன்கள், நிர்மலாக்கள் இது பற்றி பேசவே இல்லை என்பதும் புரியும்.

இன்னொன்று, கடந்த சட்டசபையில் (2011-2016) தமிழக அமைச்சர்கள் செய்த கூத்துக்கள் நியாபகம் இருக்கிறதா?. அன்று வெகுஜன மக்களிடையே பழக்கமாக இருந்த ஒரு வாக்கியம், 'இவங்க எப்படி இருந்தாலும், அவங்க(ஜெ) நல்ல கவர்னன்ஸ் தருவாங்க...' ; இது போன்ற ஒரு உத்தியை தான் நம்மிடையே மீண்டும் புகுத்த எத்தனிக்கிறது பிஜேபி.. அநேகமாக அந்த புதிய 'அவங்க' நிர்மலா சீத்தாராமனாக இருக்கலாம்.

...........
இந்த நிலையில், கடந்த 20 செப்டம்பர்'17 அன்று ஜூனியர் விகடனில் வெளிவந்த தமிழிசையின் பேட்டி மிக முக்கியமானது..
அது
//
“உங்கள் கட்சியைச் சேர்ந்த எஸ்.வி.சேகரும் கூட உங்கள் பேச்சை விமர்சிக்கிறாரே?”
“கட்சியைத் தாண்டி, சாதி ரீதியாக சிலர் யோசிப்பதால் வரக்கூடியப் பிரச்னை இது.”
//
கடந்த ஐம்பது ஆண்டுகளாக தமிழக அரசியல் எதை முன்வைத்து நகர்கிறதோ, அதை தெரிந்தோ தெரியாமலோ தன் வாய்வழி உதிர்த்திருக்கிறார் தமிழிசை.
<; font-family: inherit;">இப்போதைக்கு ஒன்றே ஒன்றை சொல்ல முடியும்; பிஜேபி கோட்டையிலிருந்து தமிழிசை போன்ற வெகுளியான எதிரி, நமக்கு இனி எப்போதும் கிடைக்கப்போவதில்லை..

https://www.facebook.com/stalin.felix.5/posts/10156069063197780

No comments:

Post a Comment