Sunday, April 18, 2010

விருப்பமில்லா தற்கொலைக்கான ஒத்திகை...


அதிகாலை நாளிதழ்களை
பார்க்கும் போது
உணர்ச்சிவசப்பட கூடாது
என்பதே என்
நெடுநாளைய பிரார்த்தனையாக
உள்ளது...

ஒவ்வெரு நாள்
காலையிலும் என்
பிரார்த்தனை அரசனால்
மீறப்படுகிறது ...

எமக்கான உரிமை
எல்லா திசைகளிலும்
மறுக்கப்படுகிறது...

எமக்கான கருணை
எல்லா வடிவங்களிலும்
நிராகரிக்கப்படுகிறது...

குடியாட்சியின் பதுமைகள்
எமது இருப்பை
கேலி செய்கிறது...

பின் பொழுதுகளில்
பேயாட்சியால்
நாங்கள் உயிரோடு
உண்ணப்படுகிறோம்...

மீண்டு வருமினும்
விருப்பமில்லா தற்கொலைக்கான
ஒத்திகையிலேயே
அந்நாள் முடிவடைகிறது.......



9 comments:

  1. Superb thinking n keep on going :)

    ReplyDelete
  2. மிகவும் அருமை உமது எண்ணங்கள்!

    ReplyDelete
  3. நல்ல நடை, நன்றாக இருக்கிறது. இது தான் பின் நவீனத்துவம் என்பார்களோ

    ReplyDelete
  4. //பின் பொழுதுகளில்
    பேயாட்சியால்
    நாங்கள் உயிரோடு
    உண்ணப்படுகிறோம்...//

    யோசிக்கத் தூண்டும் வரிகள்.
    வாழ்த்துக்கள்

    ReplyDelete