Sunday, February 10, 2019

குமரி சிஎஸ்ஐ நிர்வாகத்தால் கைவிடப்பட்ட ஒரு பெருங்கனவு

குமரி மாவட்ட CSI கிறிஸ்தவர்களை 'அரை பார்ப்பனர்கள்' என சுட்டி ஒரு பதிவு எழுதி இருந்தேன். சிலருக்கு அதில் வருத்தமிருந்தது. ஆனால், சில முற்போக்கு CSI நண்பர்கள் அந்த பதிவை Like செய்திருந்தார்கள், உண்மை என்று வாதிட்டார்கள்.
சாதாரண, அடித்தள CSI கிறித்தவ மக்களின் மீது பிராமணிய சாயல் பூசவே இல்லை என்பது எனது பதிவை தொடர்ந்து வாசிப்பவர்களுக்கு புரியும்.
............
கொஞ்சம் யோசித்து பாருங்கள்,
இந்தியாவின் முதல் மிஷன் மருத்துவமனை 180 ஆண்டுகளுக்கு முன் பழைய திருவாங்கூரில் ஆரம்பிக்கப்பட்டது. லட்சக்கணக்கான மக்கள் அந்த மருத்துவமனையால் பயன்பெற்றார்கள், பயன் பெறுகிறார்கள். அந்த மருத்துவமனையின் முன்னோடி தலைமை மருத்துவராக இருந்த, மிசனரி Theodore Howard Somervell ன் புத்தகங்களில் இருந்தும், கடிதங்களில் இருந்தும் மருத்துவமனையில் இருந்த அபரிதமான வசதிகள் குறித்து நிறைய தகவல்களை வாசிக்க முடிகிறது.
அப்படி ஆரம்பிக்கப்பட்ட ஒரு மருத்துவமனை, இந்த நேரத்தில் ஒரு பிரமாண்ட மருத்துவக்கல்லூரியாக மாறி இருக்க வேண்டும். ஆனால், பிற்காலத்தில் அந்த மருத்துவமனையில் பணியாற்றிய உள்ளூர் கிறிஸ்தவ மருத்தவர்கள், அதற்க்கான முட்டுக்கட்டைகளை போட்டார்கள். நிறைய அனுபவங்கள் பெற்றபின் தங்களுக்காக தனித்தனி மருத்துவமனைகளை குமரி மாவட்டம் முழுக்க துவங்கினார்கள்.
நெய்யூர் மருத்துவமனை, மருத்துவக்கல்லூரி ஆகி விட்டால் இவர்களுடைய மருத்துவவியாபாரம் படுத்துவிடும் என்ற முன்யோசனை தான் அதற்க்கு காரணம்.
இதையெல்லாம் தட்டிக்கேட்க வேண்டிய பிற்கால நிர்வாகிகள் கூட, மேற்படி மருத்துவவியாபாரிகளின் அழுத்தத்தால் அமுங்கி போனார்கள்.
............
80 களில், டி.ஜி.எஸ் தினகரன் தனது காந்தக்குரலால் மக்களை கட்டிப்போட, அவரை தூக்கி சுமந்தது குமரி சிஎஸ்ஐ கிறித்தவர்களே. தினகரன் பிரபலமாகி, ஒரு கன்வேன்சனுக்கு ஒருலட்சம் என்று கேட்க ஆரமபித்த பின் அந்த உறவு முறிந்தது. இடைப்பட்ட காலகட்டத்தில் தான், 'ஏழைகளுக்கு கல்லூரி' என்று அடித்தள மக்களிடம் காசு வசூல் செய்து காட்டுக்குள் காருண்யாவை உருவாக்கினார்கள்.
....
இதுபோன்ற ஆட்கள் மீது தீர்க்கமான விமர்சனங்களை வைத்திருக்க வேண்டிய நிர்வாகத்தில் இருந்த சி.எஸ்.ஐ கிறிஸ்தவர்கள் கண்ணையும், வாயையும் பொத்திக் கொண்டார்கள். ஏன்?
வளர்ந்து விட்ட இந்த பெருந்தனவார்களின் கருணையால், தங்கள் பிள்ளைகள் மற்றும் பேரப்பிள்ளைகளுக்கு கிடைத்த கல்வி & வேலைவாய்ப்பினால், அவர்களுக்கு எதிராக எங்கேயும் குரல் எழுப்பாமலேயே போனார்கள். இதன் மூலம் சாமானிய CSI கிறித்தவர்களுக்கு இவர்கள் பெரும் துரோகத்தை இழைத்தார்கள்.
இப்போது சொல்லுங்கள் இவர்கள் அரை பார்ப்பனர்கள் தானே.
....................
ஒரு ஆயிரம் பக்கம் நாவல் எழுதும் அளவுக்கு இவர்களுடைய அரசியல் கதைகள் குமரியில் இருக்கிறது. என்றாவது ஒருநாள், ஏதோ ஒரு இளையதலைமுறை இதை தீர்க்கமாய் பதிவு செய்து கேள்வி கேட்கும்.

https://www.facebook.com/stalin.felix.5/posts/10157319607012780

No comments:

Post a Comment