Tuesday, February 17, 2009

காதலனே............

இன்றோடு நீ உதிர்ந்து
இருபத்தி ஓர் வருடமாம்
நரைத்த என் கேசம் மட்டும்
கலையாமல் சாட்சி சொன்னது !!!

உன் கல்லறை சுவர்களில் கூட
சில கீறல்கள் கண்டேன்
ஆனால்
நீ எழுப்பிய நினைவு சுவரோ
இன்னும் பத்திரமாய் என் இதயத்தில்....

அம்மா, அப்பா, அண்ணன், அக்கா என்று
குடும்ப பாசத்தில் வாழ்ந்த என்னை
பிரித்து எடுத்து காதல் தந்தவனே
நீ "அன்னமாய்" பிறக்க வேண்டியவன்

புயலாய் என்னுள் நுழைந்தவனே
உன் ஓசை அடங்கிய பின் தான் தெரிந்தது
நான் இழந்தது வாழ்க்கை என்று !

ஆசைக்கு ஒன்று; ஆஸ்திக்கு ஒன்று என
தினம் தினம் கனவு வளர்த்தவனே
கனவு உடைத்து நீ மட்டும்
ஓடி போனது ஏனோ???

கண் சாய்த்த கடைசி வினாடியிலுமா தெரியவில்லை
ஓர் பெண்மையின் உயிர் ஓசை
பறித்து போகிறேன் என???

என் மவுன புலம்பல்கள் மீறி
நள்ளிரவில் ஒற்றையாய் ஒளிரும்
விண்மீன் பார்க்கும் போது உணர்கிறேன்
உன்னோடு நான் இல்லாத தவிப்பை
ஆனாலும்......
மொழிகளால் மட்டுமே நீ சேர்த்து வைத்த
உன் தாய்க்கும், தந்தைக்கும்
உன் இடம் நிரப்பி வருகிறேன்
அது வரை காத்திரு....

ம்... ம்... ம்.....
எத்தனை சமாதானம் எனக்குள்
நான் பேசினாலும் - உன்
நினைவு என்னுள் பீறிடும் போது
மனம் வெந்து சாகிறேன்
நீ என் வெட்கம் தின்ற
வினாடிகளை நினைத்து கொண்டே.................

1 comment: