Tuesday, February 17, 2009

நண்பனே......

கால தேவன் உன்னை பறித்து
இன்றோடு முன்நூத்தி சொச்சம் நாட்களாம்
நண்பன் ஒருவன் நினைவுபடுத்த
தேக்கி வைத்த கண்ணீருடன்
மெலிதாய் என் நாடி துடிப்புகளும் சேர
பீறிடுகிறது உன் நினைவு......

ஒவ்வரு மனிதரின் இதயத்திற்குள் இறங்க
நாங்கள் பிரார்த்தனம் செய்ய
வெற்றியும்-தோல்வியும் சமமாய் பெற்று திரும்பினோம்
நீயோ.......
வெற்றியை மட்டுமே முழுமையாய் பெற்றாய்
அத்தனை பெருமிதம் பிடித்ததால் தான்
வெகு சீக்கிரம் சென்றயோ ???

எங்கள் கனவுகளுக்கு விதை விதைத்து
துளிர்க்க செய்தவனே
உன் கனவுகளோடு மட்டும்
கல்லறையில் அடங்கியது ஏனோ??

ஆடம்பரமும், ஆணவமும் ஆளும் உலகில்
அன்பால் எம்மை ஆண்டவனே
வெகு சீக்கிரம் முடி துறந்தது ஏனோ??

அசர வைக்கும் அறிவோடும்
அள்ளி தெளிக்கும் நகைச்சுவையோடும்
எம்மிடையே புன்னகையை உடுத்தியவனே
ஒற்றை நாளில் ஏன் பறித்தாய் அத்தனையும் !!

நய வஞ்சகமும், நம்பிக்கை துரோகமும் நிறைத்த
நீண்ட வாழ்க்கை எனும் கடல் கடந்து
நாங்களும் வருவோம் ஓர்நாள் அளவளாவ
அதுவரைக்கும் நினைவில் பொத்தி வைத்திரு
என்றோ நாம் வாழ்ந்த கல்லூரி நாட்களை.............

No comments:

Post a Comment