Tuesday, February 17, 2009

தொலைத்து போகிறேன்.....

கடற்கரை மணலில்
நீ நடந்த சுவடுகளை கூட
பதியம் போட்டு வைத்திருந்தேன்
இன்றோ.....
உன் காதலுக்கு யாசகம் கேட்கும்
எறும்பாய் எனை உணர்ந்து
நசுக்கி செல்கிறாய்
அதே பாதங்களால் !!!

கட்டி எழுப்பிய காதல் கனவுகளை
கலைத்து விடலாம் என முன்பே
என் முன்நின்று சொல்லி இருக்கலாம்
இன்றோ....
புறமுதுகில் புண்பட்ட
போர்வீரனை விட துடிக்கிறேன்
குத்தியவள் நீ அல்லவா!!!

நீ தந்த வலிகளால்
இரத்த கூடுகள் உடைந்து சாய
நாம் நேசித்த கணம் மறக்க
வழி கேட்டேன் மனிதர்களிடம்...
மதுவை தேடு என்றான் ஒருவன்
மாதுவை நாடு என்றான் மற்றொருவன்
ம் ம் ம் ....
சலிப்பை தந்த வழிகள் கேட்டு
உனை நோக்கி ஆச்சரியமாய் எனை அசைத்த
மனதை கேட்டேன்
மரணத்தை தொடு - என்றது

முடிவு ஒன்று கிடைத்தவனாய்
வாழ்க்கை என்னும் நீண்ட யாத்திரையில்
காதல் எனும் அத்தியாத்தால்
வீழ்ச்சியின் விழும்பில் நின்று
தொலைத்து போகிறேன்
உனக்கான என்னையும்
எனக்கான என் ஆத்மாவையும்.....

No comments:

Post a Comment