Tuesday, February 17, 2009

பெண்ணே ஏன் பெண் ஆனாய்..........

முதல் பிரசவத்தில் இரட்டை பெண்ணாய்
பிறந்திருக்க தான் ஆண்மை பீற்றியவன்
மூன்றாவதும் பெண்ணாய் கிடைக்க
விழி திறக்கா ஒளி நேரத்தில்
நெல்லுக்கு இரையாக்கினான்
பெண்ணே ஏன் பெண் ஆனாய்..........

காதல் யாசகம் கேட்டவனுக்கோ
கணவன் என இடம் தர
கண்ணீரை சுமக்க வைத்து
காணாமல் போன அவனை எண்ணி
கல்லறைக்குள் போய் அழுதாள்
பெண்ணே ஏன் பெண் ஆனாய்..........

தன்னில் பாதி தங்கை என
உற்சாக ஊஞ்சல் ஆடியவன்
ஆறறிவு பின்னாளில் இவனை ஆள
அப்பாவின் உயிலை பிரிக்காமல்
உறவை மட்டும் பிரித்து வைத்தான்
பெண்ணே ஏன் பெண் ஆனாய்..........

ஊராடங்கி இரண்டாம் ஜாமம் ஆயினும்
கண்விழித்து கட்டியவனுக்கு
உடல்-உள்ள பசி போக்கியவள்
என்றோ ஓர் நாள் ஆசையாய் அணைக்க
புறம் பேசி புறமுதுகிட்டு தூங்கினான்
பெண்ணே ஏன் பெண் ஆனாய்..........

பத்து மாதம் பேணி காத்து
தான் குருதியை பால் ஆக்கி
பொன் மேனி தந்தவளுக்கு
பின் ஒரு நாள் பலூற்றி
அனுப்பி வைத்தான் மொத்தமாய்
பெண்ணே ஏன் பெண் ஆனாய்..........

1 comment: