
அதிகாலை நாளிதழ்களை
பார்க்கும் போது
உணர்ச்சிவசப்பட கூடாது
என்பதே என்
நெடுநாளைய பிரார்த்தனையாக
உள்ளது...
ஒவ்வெரு நாள்
காலையிலும் என்
பிரார்த்தனை அரசனால்
மீறப்படுகிறது ...
எமக்கான உரிமை
எல்லா திசைகளிலும்
மறுக்கப்படுகிறது...
எமக்கான கருணை
எல்லா வடிவங்களிலும்
நிராகரிக்கப்படுகிறது...
குடியாட்சியின் பதுமைகள்
எமது இருப்பை
கேலி செய்கிறது...
பின் பொழுதுகளில்
பேயாட்சியால்
நாங்கள் உயிரோடு
உண்ணப்படுகிறோம்...
மீண்டு வருமினும்
விருப்பமில்லா தற்கொலைக்கான
ஒத்திகையிலேயே
அந்நாள் முடிவடைகிறது.......