Showing posts with label ஈழம். Show all posts
Showing posts with label ஈழம். Show all posts

Tuesday, September 15, 2009

கண்டன கூட்டம் - தொகுப்பு

வணக்கம்

12-09-2009 அன்று சென்னையில் 'சேவ் தமிழ்' குழுமத்தின் சார்பாக ஊடகங்களுக்கு எதிராக இலங்கை அரசின் வன்முறையை எதிர்த்து நடந்த கண்டன கூட்டத்தை பற்றி பல்வேறு தமிழ் இணைய தளங்களில் வந்துள்ள சுட்டிகளை இங்கே தொகுத்து அளித்து உள்ளேன். கலந்து கொண்ட நல் உள்ளங்களுக்கு எமது நன்றி.

http://puthinam.com/full.php?2b24OOo4b34U6D724dabVoQea03Y4AAc4d3cSmA2e0dW0MtRce03f1eC2ccdUcYm0e

http://article.wn.com/view/WNAT43b0bcb8c8f0b581e9c1804e0eb5fe79/

http://www.tamilwin.org/view.php?2aSWn5e0dlj0C0ecGG7V3b4X9E84d3g2h3cc2DpY3d436QV2b02ZLu3e

http://www.eelamhomeland.com/cutenews/show_news.php?subaction=showfull&id=1252920425&archive=&template=news

http://www.pathivu.com/index.php?mact=News,cntnt01,print,0&cntnt01articleid=3468&cntnt01showtemplate=false&cntnt01returnid=54

http://www.meenagam.org/?p=10195

http://thatstamil.oneindia.in/news/2009/09/15/tn-leading-journalists-condemn-srilankas-fascist.html

http://24dunia.com/tamil-news/search/தமிழர்களை-சங்கிலி.html

http://inioru.com/?p=5305

http://www.kunrinkural.com/script/viewnews.asp?newsid=0900517878hhnnj














Thursday, September 10, 2009

ஊடகங்களுக்கு எதிராக இலங்கை அரசின் வன்முறை - கண்டன கூட்டம்


ஈழத்தில் தமிழரின் கடைசி சொட்டு ரத்தத்தை குடித்த பின்னும் அதனுடைய வெறி அடங்காமல் திறந்த வெளியில் சிறை கூடங்களை அமைத்து அப்பாவிகளை இன்றும் சிதைத்து வருகிறது பேரினவாத சிங்கள அரசு... போர் நின்று விட்டது என அறிவித்து சுமார் 5 மாதங்கள் ஆகியும், அதனுடைய பயங்கரவாத எல்லைகளை இன்னும் விரிவு படுத்தி கொண்டே இருக்கிறது.

பெருவாரியான ஊடங்கங்களுக்கு எந்த தகவலை அளிக்காமலும், பல ஊடகங்களை பணத்தின் பெயரால் வளைத்து போட்ட இலங்கை அரசு எதற்கும் அடிபணியாமல் உண்மைகளை வெளி படுத்திய பத்திரிக்கையாளர்களை "சட்டம்" என்ற கொடூர கைகள் மூலம் அடக்க முயல்கிறது. அந்த அடக்கு முறைகளுக்கு சமீபத்திய இரை 'சண்டே டைம்ஸ்' இன் தமிழ் பத்திரிகையாளர் ஜெயபிரகாஷ் சிற்றம்பலம் திசநாயகம்.

அரசுக்கு எதிராக எழுத புலிகளிடம் பணம் பெற்றார் என பொத்தம் பொதுவாக குற்றம் சாட்டி, இலங்கை நீதி மன்றத்தின் கருப்பு ஆடுகள் அவருக்கு 20 ஆண்டு கால சிறை தண்டனை வழங்கி உள்ளது.

நம் கண்முன்னே நடக்கும் இந்த அநீதிக்கு எதிராய் குரல் கொடுக்க வேண்டியது ஒவ்வரு தமிழனின் கடமை. போரின் போது இறையாண்மை பேசிய மவுனிகள், தமிழர்களுக்கு ஆதரவான எழுது உரிமையை பறிக்கும் இந்த நிலையிலும் மவுனமாகவே கிரிக்கெட் ஸ்கோர் பார்த்து கொண்டு இருகிறார்கள். வரலாறு இவர்களுக்கு இன்றைய சூழ்நிலையின் விபரீதத்தை கற்று கொடுக்கும் என்று எண்ணி இவர்களை நிராகரிப்போம்.

பத்திரிகையாளர்களுக்கு எதிராக இலங்கை அரசின் அடக்கு முறைகளை கண்டித்து 'சேவ் தமிழ்' (Save Tamil) குழுமமானது மூத்த பத்திரிகையாளர்களை கொண்டு சென்னையில் கண்டன கூட்டத்தை நடத்த உள்ளது. உதிர்ந்து கொண்டிருக்கும் ஒரு இனத்தின் குரலை உயர்த்தி பிடிக்க உங்கள் வருகையை பணிவன்புடன் எதிர்பார்கிறோம்.

நாள்: 12-09-2009
நேரம்: காலை 10:30
இடம்: தெய்வ நாயகம் மேல் நிலை பள்ளி, வெங்கட் நாராயண ரோடு, தி நகர், சென்னை.



மேலும் தகவல்களுக்கு

9840090898, 9884468039


Friday, February 27, 2009

முத்துக்குமரனுக்கு வீர வணக்கம்.....


முத்து குமரனே.......
நீ மண்ணில்
புதைக்கப்பட்டாய் என்பதை விட
எம் நெஞ்சில்
விதைக்கப்பட்டாய் என்பதே நிஜம்........

உன் எரிந்த உடலை கூட
துருப்பு சீட்டு ஆக்கியவனே
அனலாய் கொதிக்கிறது
ஆறு கோடி இதயம்
நீ கொளுத்திய
ஒரே பொறியால்............

இன்று நீறு பூத்து நிற்கும்
நம் இளைஞர் படை
வீறு கொண்டு வேங்கையாகும் நாளில்
கடல் கூட தாங்காது
இல்லாமல் போகும் இலங்கை படை.........

உன் சம கால நூற்றாண்டில் யாம்
வாழ்த்தோம் என்பதே
நாளைய சரித்திரத்தில் நாம்
பேசிக் கொள்ளும் பெருமை.....

வீரனே.... யாம் இருக்கும் நாள் வரை
உன் நினைவுகள் எம்மோடு இருக்கும்...
யாம் இல்லாத நாளில்
நாம் உன்னோடு இருப்போம்.....

அறுதிட்டு சொல்கிறோம்...........
ராமன் வாழ்ந்த தேசம் தாண்டி
ராவணன் வாழ்ந்த தேசத்தில் - ஏதோ
ஓர் ஈழ தாயின் கருவறையில்
இன்று உதித்திருப்பாய் - நாளை
நடக்கும் புனித போருக்காய்!!!!!!!!!!!!!