Showing posts with label திருவாங்கூர். Show all posts
Showing posts with label திருவாங்கூர். Show all posts

Monday, February 11, 2019

ராவண விழா

19 ஆம் நூற்றாண்டில் திருவாங்கூர் ராஜா ரவி வர்மா வரைந்த ஓவியம் (SITA Under the Ashoka Tree). பிராமணிய தொகுப்பின் நீட்சியான ரவி வர்மா, தென்இந்தியர்களை குரங்காகவும், கருப்பாகவும் வரைந்ததில் ஆச்சரியமில்லை. (நாம் கருப்பர்கள் தான் என்பது வேறு விசயம்). ...........

இங்கிருக்கும் எல்லா மதநம்பிக்கைகளையும் ஆராய்ந்து பதிவு செய்கிறார். இயற்கை வழிபாடு, நாட்டாரியல் வழிபாடு என எல்லாவற்றையும் பதிவு செய்யும், 'ராவண விழா' ஒன்று ஆண்டுதோறும் மதுரைக்கும் கீழே கொண்டாடப்பட்டதை பதிவு செய்கிறார்.

 அதாவது, ராவணன் சீதையை கடத்திவந்த நாளை வருடம் தோறும் 'ஆடி அம்மாவாசைக்கு அடுத்தநாள் ' கொண்டாடியதாக குறிப்பிடுகிறார். மற்றொரு குறிப்பில், ராமனை demon யாக மக்கள் முன்வைத்து வழிபட்டதாகவும் பதிவு செய்கிறார். ............

 'ராவணன் ஜலதோஷம் வந்தா எந்த கை எடுத்து சீந்துவான்?' என்ற கடி ஜோக்குகளை கேட்டு வளர்ந்த எங்களுக்கு, 300 வருடங்களுக்கு முன் அவன் ஒரு வழிபாட்டு மரபினனாக இருந்திருக்கிறான் என்பது ஒரு ஆச்சரியமான செய்தியே. காலம் இப்படி தான், வரலாற்றை தொலைந்தவர்களின் நீட்சிகள், அது தொலைந்த இடத்தில் இருந்தே புதுப்பிப்பார்கள்.

 #திருவாங்கூர்_குறிப்புகள்
 # Edited

Sunday, February 10, 2019

குமரி சிஎஸ்ஐ நிர்வாகத்தால் கைவிடப்பட்ட ஒரு பெருங்கனவு

குமரி மாவட்ட CSI கிறிஸ்தவர்களை 'அரை பார்ப்பனர்கள்' என சுட்டி ஒரு பதிவு எழுதி இருந்தேன். சிலருக்கு அதில் வருத்தமிருந்தது. ஆனால், சில முற்போக்கு CSI நண்பர்கள் அந்த பதிவை Like செய்திருந்தார்கள், உண்மை என்று வாதிட்டார்கள்.
சாதாரண, அடித்தள CSI கிறித்தவ மக்களின் மீது பிராமணிய சாயல் பூசவே இல்லை என்பது எனது பதிவை தொடர்ந்து வாசிப்பவர்களுக்கு புரியும்.
............
கொஞ்சம் யோசித்து பாருங்கள்,
இந்தியாவின் முதல் மிஷன் மருத்துவமனை 180 ஆண்டுகளுக்கு முன் பழைய திருவாங்கூரில் ஆரம்பிக்கப்பட்டது. லட்சக்கணக்கான மக்கள் அந்த மருத்துவமனையால் பயன்பெற்றார்கள், பயன் பெறுகிறார்கள். அந்த மருத்துவமனையின் முன்னோடி தலைமை மருத்துவராக இருந்த, மிசனரி Theodore Howard Somervell ன் புத்தகங்களில் இருந்தும், கடிதங்களில் இருந்தும் மருத்துவமனையில் இருந்த அபரிதமான வசதிகள் குறித்து நிறைய தகவல்களை வாசிக்க முடிகிறது.
அப்படி ஆரம்பிக்கப்பட்ட ஒரு மருத்துவமனை, இந்த நேரத்தில் ஒரு பிரமாண்ட மருத்துவக்கல்லூரியாக மாறி இருக்க வேண்டும். ஆனால், பிற்காலத்தில் அந்த மருத்துவமனையில் பணியாற்றிய உள்ளூர் கிறிஸ்தவ மருத்தவர்கள், அதற்க்கான முட்டுக்கட்டைகளை போட்டார்கள். நிறைய அனுபவங்கள் பெற்றபின் தங்களுக்காக தனித்தனி மருத்துவமனைகளை குமரி மாவட்டம் முழுக்க துவங்கினார்கள்.
நெய்யூர் மருத்துவமனை, மருத்துவக்கல்லூரி ஆகி விட்டால் இவர்களுடைய மருத்துவவியாபாரம் படுத்துவிடும் என்ற முன்யோசனை தான் அதற்க்கு காரணம்.
இதையெல்லாம் தட்டிக்கேட்க வேண்டிய பிற்கால நிர்வாகிகள் கூட, மேற்படி மருத்துவவியாபாரிகளின் அழுத்தத்தால் அமுங்கி போனார்கள்.
............
80 களில், டி.ஜி.எஸ் தினகரன் தனது காந்தக்குரலால் மக்களை கட்டிப்போட, அவரை தூக்கி சுமந்தது குமரி சிஎஸ்ஐ கிறித்தவர்களே. தினகரன் பிரபலமாகி, ஒரு கன்வேன்சனுக்கு ஒருலட்சம் என்று கேட்க ஆரமபித்த பின் அந்த உறவு முறிந்தது. இடைப்பட்ட காலகட்டத்தில் தான், 'ஏழைகளுக்கு கல்லூரி' என்று அடித்தள மக்களிடம் காசு வசூல் செய்து காட்டுக்குள் காருண்யாவை உருவாக்கினார்கள்.
....
இதுபோன்ற ஆட்கள் மீது தீர்க்கமான விமர்சனங்களை வைத்திருக்க வேண்டிய நிர்வாகத்தில் இருந்த சி.எஸ்.ஐ கிறிஸ்தவர்கள் கண்ணையும், வாயையும் பொத்திக் கொண்டார்கள். ஏன்?
வளர்ந்து விட்ட இந்த பெருந்தனவார்களின் கருணையால், தங்கள் பிள்ளைகள் மற்றும் பேரப்பிள்ளைகளுக்கு கிடைத்த கல்வி & வேலைவாய்ப்பினால், அவர்களுக்கு எதிராக எங்கேயும் குரல் எழுப்பாமலேயே போனார்கள். இதன் மூலம் சாமானிய CSI கிறித்தவர்களுக்கு இவர்கள் பெரும் துரோகத்தை இழைத்தார்கள்.
இப்போது சொல்லுங்கள் இவர்கள் அரை பார்ப்பனர்கள் தானே.
....................
ஒரு ஆயிரம் பக்கம் நாவல் எழுதும் அளவுக்கு இவர்களுடைய அரசியல் கதைகள் குமரியில் இருக்கிறது. என்றாவது ஒருநாள், ஏதோ ஒரு இளையதலைமுறை இதை தீர்க்கமாய் பதிவு செய்து கேள்வி கேட்கும்.

https://www.facebook.com/stalin.felix.5/posts/10157319607012780

முகிலனின் கதை

முகிலன்---> முகிலன்விளை
குமரி மாவட்டத்தில் உள்ள சில ஊர்களில் பெயர்களை ஆழ்ந்து கவனித்ததுண்டு. ஒவ்வொரு ஊரின் பெயர் காரணங்களை சொல்லித்தர வேண்டிய மூதாதைய கண்ணிகள் எப்போதோ அது தொடர்பான நினைவுகளை தவற விட்டிருக்கிறார்கள். தம்பி பால் பெக்கர், வெகு சமீபத்தில் முகிலன் தொடர்பான பதிவு ஒன்றை பதிவு செய்திருந்தார். அதன் தொடர்ச்சியாகவே இந்த பதிவை எழுகிறேன்.
................................
காலம் : 1680, தில்லியில் சுல்தானாக அவுரங்கசீப் இருக்கிறார். இந்தியா முழுவதையும் ஒரே குடைக்குள் கொண்ட வர, அவுரங்கசீப் தொடர்ந்து போர்கள் செய்து வருகிறார். தெற்க்கே இருக்கும் சில நிலப்பகுதிகள் அவருக்குள் கீழ் வராமல் இருப்பதை அறிந்த அவர், வேணாடு (திருவான்கூருக்கு முந்தைய பகுதி) நோக்கி செல்ல தனது நம்பிக்கையான தளபதியை கட்டளையிடுகிறார். அந்த தளபதி தான் முகிலன் (அவர் பிறப்பால், மதுரையை சார்ந்த தமிழர் என்றும், பிறகாலத்தில் இஸ்லாமிய சமயத்தை தழுவி அவர்கள் போர் படையிலேயே இணைத்தார் என்பது செவிவழி வரலாறு).
வேணாடோ, 'தடி எடுத்தவன் தண்டல்காரன்' போல, உள்ளூர் ஆட்சியாளர்களில் கைகளில் இருக்கிறது. ஆற்றிங்கல் ராணியாக உமையம்மை ராணி இருக்கிறார்.
வழியில் இருக்கும் சிறுகுறு அரசுகளை எல்லாம் வீழ்த்தி வரும் முகிலன், வேணாட்டு அரசை எளிதாக கைப்பற்றுகிறார். இங்கே கைப்பற்றப்பட்ட பொருட்களில் சிலவற்றை அவுரங்கசீப்புக்கு பரிசாக அளித்து விட்டு, 'வேணாட்டு ராஜா'வாக தன்னை பிரகடனப்படுத்திக் கொள்கிறார்.
முகிலனை வெல்லவே முடியாது என்று எண்ணும், உமையம்மா ராணி, கோட்டயம் பகுதியில் ராஜாவாக இருக்கும் கேரளவர்மனிடம் உதவிகள் கேட்கிறார். முகிலனின் படைபலத்தை கண்டு திகைக்கும், கேரளவர்மன் திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோயிலில் நேர்ச்சை வைத்து வழிபடுகிறார்.
திருவட்டாறு அருகே உள்ள மலை பகுதியில் போர் நடக்கிறது, போர் உச்சத்தை தொடும்போது குழவிகள் முகிலனின் படைகளை தாக்குகிறது. முகிலனின் படைகள் பின்வாங்கி காட்டில் போய் மறைகிறது. குளவிகளின் தாக்குதலால் பாதிக்கப்பட்ட முகிலன் காட்டிலேயே இறந்து போகிறார். முகிலனை அந்த பகுதியிலே அடக்கம் செய்து விட்டு படைகள் திரும்ப போகிறது. (திருவட்டாறு அருகே அவரது கல்லறை இருப்பதாக தகவல்- நான் பார்த்ததில்லை)
..........................
இப்படி ஒரு குறுகியகாலத்தில் வேணாட்டை கைப்பற்றி தன்னை ராஜாவாக பிரகடனம் செய்துக்கொண்ட முகிலனை பற்றிய தகவல்கள் அரிதாகவே பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், சுவாரசியமாக 'முகிலன்' ஆண்டதற்கும், இருந்ததற்கும் சாட்சியாக குமரி முழுக்க முகிலன் என்ற பெயரோடு தொடங்கும் ஊர்கள் உள்ளன.
சில உதாரணங்கள்,
முகிலன் விளை - மிடாலக்காடு
முகிலங்கரை - மணலிக்கரை
முகிலன்விளை - இருளப்பபுரம்
முகிலன்குடியிருப்பு - கன்னியாகுமரி - மணக்குடி சாலை
*விளை என்பது விளைநிலங்கள் உள்ள பூமி என்று குறிப்பதாகும்.
...............
முகிலன் ஒரு தமிழர் என்பதால், அவர் தொடர்பான வரலாறு மறைக்கப்பட்டதா? என்ற சந்தேகம் எழாமல் இல்லை.
முகிலன், முகிலன்விளை தொடர்பான செய்திகள் நீங்கள் அறிந்திருந்தால் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்.

https://www.facebook.com/stalin.felix.5/posts/10157334098687780