Showing posts with label கடிதம். Show all posts
Showing posts with label கடிதம். Show all posts

Saturday, October 28, 2017

அசலூர்க்காரன் ஹச்.ராஜா சர்மாவுக்காக

அசலூர்க்காரன் ஹச்.ராஜா சர்மாவுக்காக..
.........
ஸ்டாலின் பெலிக்ஸ்' என்ற எனது பெயரின் இரண்டாவது பகுதியை வைத்தது எனது பெரியம்மா. அப்பா எனக்கு 'கார்ல் மார்க்ஸ்' என பெயர் வைக்க நினைத்தாராம், ஊர் கிழவிகள் அந்த பெயரை மென்று தின்று விடுவார்கள் என சொல்லி அம்மா கடுமையாக மறுக்க, பின் ஸ்டாலின் என வைத்திருக்கிறார்கள். சென்ற முறை விடுமுறைக்கு ஊருக்கு சென்றிருந்த போது, எனது தாய்மாமன் என்னிடம், 'ஸ்டாலின்' என எனக்கு பெயர் வைத்து, அதை பிறப்பு அலுவலகத்தில் பதிவு செய்தது அவர் தான் என்றார்.
பெரியவர்கள் செய்த தவறை நாம் செய்யக்கூடாது என்று கருதிய காலகட்டத்தில் ஈழம் நம் கையை விட்டு போயிருந்தது. அதற்க்குபின் பிறந்த மகளுக்கு 'எழில் ஓவியா' என்றும் மகனுக்கு 'இளஞ்சேரல்' என்றும் பெயர் சூட்டி மகிழ்தோம். 2012 ஆம் ஆண்டில் எனது பெயரையும் தூயதமிழில் மாற்றிக்கொள்ள முயன்றுக்கொண்டிருந்த சூழ்நிலையில் புலம் பெயர்ந்தேன்.
2014 லுக்கு பின் காவி பயங்கரவாதிகள், தமிழ்/செங்கிருந்த பெயர்களை தவிர்த்து மற்ற அனைத்து பெயர்களையும் 'எதிரி'களாக சித்தரிக்க துவங்கிய போது, நான் எனது பெயரை மாற்ற நினைத்தது தவறு என முதன்முதலாக உணர்ந்தேன்.
இப்போது பாம்பு வேறு வடிவில் காலை சுற்ற துவங்கி இருக்கிறது. யாரெல்லாம் இன உணர்வில் தங்கள் பெயர்களை தமிழ் பெயர்களாக மாற்றிக் கொண்டார்களே அவர்களை 'டார்கெட்' செய்து, பாருங்கள் தமிழ் பெயரில் ஒளிந்து இருக்கும் கிறிஸ்தவர்களை என பரப்புரை செய்துக்கொண்டு இருக்கிறார்கள்.இவர்களுடைய இந்த பரப்புரை எந்த பெரியபாதிப்பை உருவாக்கப் போவது இல்லை என்றாலும், 'ஒருவேளை அப்படி இருக்குமோ....'என்ற லேசான சந்தேக உணர்வை பொது நிலையினரிடம் தூண்டி விடுவதே இந்த 'காவி அடிமைகளின்' நோக்கம்.
...
இனி, எந்த சூழ்நிலையிலும் இந்த 'தண்ணீர் பாம்புகளுக்காக' நான் பெயர் மாற்றிக்கொள்ள போவதில்லை. பெயரை வைத்து, 'அசலான்' என வசைபாடும் ஹச்.ராசா சர்மா வாவை விட நாங்கள் கறுப்பர்கள். ஒரே மண்ணில் நீண்ட தலைமுறை தலைமுறையாக வாழும் ஒரு பாரம்பரிய மரபு எங்களுக்கு இருக்கிறது. எல்லாவற்றையும் விட, உங்களை விட அட்சர சுத்தமாக வள்ளுவ தமிழை நாங்கள் பேசுகிறோம். போடா டேய்..

https://www.facebook.com/stalin.felix.5/posts/10156052037127780

.........................................
அமெரிக்கா போன நம்மூர்...
கிருஷ்ணன்-கள் எப்படி Chris ஆனார்கள்?
கோபால்-கள் எப்படி Gops ஆனார்கள்?
சந்தனமூர்த்தி -கள் எப்படி Sandy ஆனார்கள்?
சரவணன் -கள் எப்படி Sarav ஆனார்கள்?
என்பதையும் ஆராய்ந்து சொல்லலாம் ஹச்.ராஜா சர்மா ஜி..
என்ன, அமெரிக்கக்காரன் இதெயெல்லாம் கண்டுக்காம விட்டிருவான். அவன் காலை நக்கி பிழைக்கும் உள்ளூர் நாய்கள் தான் குறைத்துக் கொண்டிருக்கிறது.

https://www.facebook.com/stalin.felix.5/posts/10156049092382780





Saturday, September 4, 2010

நேற்று நண்பன்... இன்று குழந்தை...... நாளை ?

நண்பர் காட்வினை பற்றிய முதல் பதிவுக்கு இங்கே செல்லவும்
http://stalinfelix.blogspot.com/2010/08/blog-post.html


அறுவைசிகிட்சையும், முதுகுத்தண்டில் ஒன்றிரண்டு கம்பிகளை தவிர எப்படி மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்களோ , அதை போலவே ஏறக்குறைய ஒரு மாத மருத்துவமனை வனவாசத்திற்கு பின் வீடு திரும்பி இருக்கிறான் காட்வின். பேசவும், கை அசைக்கவும் முடிகிறது என்பதை தாண்டி இடுப்புக்கு கீழே எந்த அசைவும் இல்லாமல் படுத்து கிடைக்கிறான்.

இயற்கை உபாதைகள் அவனை அறியாமலே தன்னிச்சையாக வெளியேறுகின்றன.ஒரு குழந்தையை போல, எப்போதும் அவனோடு ஒருவர் இருந்தே கவனித்து கொள்ள வேண்டிய சூழல் என ஒவ்வொரு கணமும் கொடுமையாகவே நகர்கின்றது காட்வினுக்கு.

மருத்துவர்களிடம் இது பற்றி கேட்டால் 'இரண்டு மாதத்திலும் சரியாகலாம், இரண்டு வருடத்திலும் சரியாகலாம்' என கடவுளை நோக்கி கை காட்டி விடுகின்றனர்.

பெரும் கனவுகளோடு உற்சாகமாக வலம் வந்த காட்வின், சிதைந்த உடலோடு 'எப்படியும் சீக்கிரம் சரியாகி விடும், தொழிலை சீக்கிரம் ஆரம்பிப்பேன்' என்ற நம்பிக்கையோடே பேச ஆரம்பிக்கிறான்.'கொஞ்சம் உக்கார முடிஞ்சுதுன்னா வீட்ல இருந்தே சேனல ஆப்பரேட் பண்ண முடியும். ஆனா, கொஞ்சம் சாதனங்கள் வாங்கணும், மார்கட்டிங்க்கு ஆளு பார்க்கணும், விளம்பரங்களை சூட் பண்றதுக்கு ஆள் பார்க்கணும் ' என சொல்லும் போதே தன்னால் எல்லாவற்றையும் கவனிக்க முடியவில்லையே என்ற ஏக்கம் தெறிக்கிறது.

கண்டிப்பாக உனக்கு உடல் நிலை சரியாகும், மறுபடியும் அலுவலகத்துக்கு போய் தொழிலை கவனிப்பாய் என நாங்கள் அவனை ஆறுதல் படுத்தினாலும் கடந்த ஒரு மாதத்தில் மற்ற உள்ளூர் சேனல்களில் என்னென்ன புது நிகழ்ச்சிகள் வந்திருகின்றது, தொழில் நுட்பம் என்னென்ன என்பதை கவனிப்பதிலே தான் அவனுடைய கவனம் செல்கிறது.

பணமும், சூழலும் மட்டும் சரியாக அமைந்த்திருந்தால் எத்தனையோ வெற்றிகளை கடந்து போய் இருக்க வேண்டிய ஒரு தொழில்நுட்ப வல்லுனன் கட்டிலிலே நாளைய நாட்களை பற்றிய கனவுகளிலே கழிப்பதை காணும் போது மனம் பெரிதும் துயருறுகிறது.


ஏறக்குறைய அரை நாளை அவனோடு செலவழித்து கிளம்பும் போது எப்போதுமே வருத்தப்படாத அவனுடைய கண்களில் விழிநீர் வழிந்தோடி விடை சொல்கிறது எங்கள் மூவருக்கும்.இப்போதைக்கு காட்வின் பேசுகிறான் என்பது மட்டுமே நாளை அவனை குறித்த எங்கள் நம்பிக்கைக்கு மிச்சம் இருக்கிறது......

காட்வினுடைய வாழ்வையும், கனவையும் தக்க வைத்து கொள்ள உங்களால் உதவ முடியும் எனில் உதவுங்கள்.
அவருடைய சகோதரருடைய வங்கி விவரம்
----------------------------------------------
Name: MARTIN JOSE G
Account No : 00041050461930
Bank : HDFC
Branch: ITC CENTRE, CHENNAI
IFSC NO: HDFC0000004
In Remarks please specify "SAVE GODWIN"
----------------------------------------------

மேலதிக விபரங்களுக்கு என்னை தொடர்பு கொள்ளுங்கள் 9710421045

Thursday, August 5, 2010

நொடியில் நொறுங்கியவனுக்காக.......


ஜூலை 31 இரவு 10 மணி - உலகமே நண்பர்கள் தினத்தை கொண்டாட தயாராகி கொண்டிருந்த போது திருவனந்தபுரம் அனந்தபுரி மருத்துவமனையில் அவசர சிகிட்சை பிரிவில் காய்ந்த சருகு போல் கிடந்தான் 'Gaadi' என்று எங்களால் செல்லமாய் அழைக்கப்படும் காட்வின் ஜெயபால்.


மருத்துவர்களும், தாதியர்களும் புடைசூழ தூக்குப் படுக்கையில் கிடத்தி அறுவை சிகிச்சைக்கு கொண்டு செல்லும் போது தான் நாங்கள் மருத்துவமனையை அடைந்தோம்.. ஆவேசத்துடன் கையை பிடித்து 'Gaadi' என்றேன் அதே புன்னகை உதிர்த்தான் வலது புறமாக நின்ற என்னையும், ஹமில்டனையும் பார்த்து...

முதுகெலும்பு உடைந்த நிலையில், உயிருக்கு ஆபத்தான அறுவை சிகீட்ச்சைக்கு கொண்டு செல்லும் வழியில் இப்படி சிரிக்க முடியுமா என்ற கேள்வி அழுகையையே தந்தது...


கட்வினுக்கும் எங்களுக்குமான நட்பு அபூர்வமானது.... கல்லூரியில் தான் முதல் முதலாக சந்தித்தேன்... என்னை விட ஒரு வருடம் சீனியர் ... .ஏறக்குறைய பத்து வருடங்கள் கழிந்த பின்பும் இன்றும் அதே வீச்சுடன் தொடர்கிறது எங்கள் நட்பு... எங்கள் வாழ்வின் துயரமான பொழுதுகளில் கூடே இருந்து ஆறுதல் அளித்தவன், மகிழ்ச்சியான தருணங்களை பகிர்ந்து கொண்டவன் இன்று எழவே இயலாத நிலையில் வீழ்ந்து கிடக்கும் போது சொல்லணா துயரத்தையே தருகிறது..

பட்டய படிப்பில் ஏறக்குறைய தொண்ணூறு சதவீத மதிப்பெண் எடுத்தும் குடும்ப சூழ்நிலைகளால் மேல்படிப்புகள் படிக்க இயலாமல் 900 ரூபாய் சம்பளத்தில் உள்ளூரிலே ஒரு மின்னணுவியல் கடைக்கு வேலைக்கு போக துவங்கினான். விவசாயான தந்தை உடல் நலத்தில் குன்ற அக்கா, இரண்டு தம்பிகள் ஒரு தங்கை என முழு குடும்பத்தையும் இவன் தாங்க வேண்டியது ஆயிற்று... வீட்டிலே சொந்தமாக தொழிலை துவங்கி பின் கலை சார்ந்த ஆர்வம் அதிகமாக உள்ளூர் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றில் பணி புரிந்தான்..

ஏறக்குறைய ஆறு வருட அனுபவம் கிடைத்த பின்பு தன்னிடம் இருந்த சேமிப்புகளையும், தங்கையின் திருமணத்திருக்கு இருந்த நகைகளையும் வைத்து சொந்தமாக உள்ளூர் தொலைக்காட்சி ஒன்றை ஆரம்பித்தான்... தற்போது துவங்கிய தொழில் ஆகையால் வேலைக்கு யாரையும் அமர்த்தி கொள்ளாமல் அலுவலகமே கதியென கிடப்பான்.. நல்ல தரமான நிகழ்ச்சிகளை வழங்கி, சமூகம் சார்ந்த நிகழ்ச்சிகளில் தன்னை ஈடுபடுத்தி கொண்டிருந்தவனின் வாழ்கையில் வந்தது அந்த கருப்பு தினம் .

ஜூலை 31 அதிகாலை மூன்று மணிக்கு, மறுநாள் காலை வரை போட வேண்டிய நிகழ்ச்சிகளை கணிப்பொறியில் அமைத்து வைத்து விட்டு அசதியோடே இரண்டாம் மாடியில் இருந்த அலுவலகத்தில் இருந்து கீழே இறங்கி இருக்கிறான்..கேபிள் ஒயர் ஒன்று அறுந்து கிடப்பது தெரியாமல் வேகமாய் நடக்க, தடுக்கி இரண்டாம் மாடியில் இருந்து கீழே விழுந்திருக்கிறான்.


மயங்கி கீழே கிடக்க அதிகாலை ஆனதால் யாரும் கவனிக்காமல் காலையில் தான் அக்கம்பக்கத்தினர் பக்கத்தினர் பார்த்து அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்திருகின்றனர். அவர்களும் ஆரம்ப கட்ட சிகிச்சைகளை கொடுத்து விட்டு கையை விரித்து விட்டனர்... அனந்தபுரி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்தபின்பும் இடுப்புக்கு கீழே எந்த உணர்ச்சியும் இல்லாமல் படுத்து கிடக்கிறான்.


ஒரே பருவத்து நண்பர்கள் பெரும்பாலும் திருமணம் செய்து கொள்ளும் போதும் 'Gaadi உனக்கு எப்போ கல்யாணம்' என்று கேட்டால் தனது தங்கையின் திருமணத்திற்கு அப்புறமே தன் திருமணம் என கூறுவான்... ஒரு குடும்பத்தையே தன் உழைப்பால் தாங்கி வந்த நண்பன் 'ஒண்ணுக்கு போறது கூட தெரியமாட்டேங்குது, இடுப்புக்கு கீழ உணர்ச்சியே இல்ல' என தெக்கி தெக்கி சொல்லும் போது உள்ளமே உடைந்து விடுகிறது.


அவனை தவிர யாருக்குமே அந்த சானலை இயக்க தெரியாததால் அடுத்த நாளே தொடர்பு அற்று கிடக்கிறது. நண்பர்கள், உறவினர்கள் என உதவினாலும் சாமாளிக்கவே முடியாத பொருளாதார சூழ்நிலையில் தத்தளித்து கொண்டிருக்கிறது அவனது குடும்பம். உங்கள் பிராத்தனைகளோடே உங்களால் முடிந்த சிறு உதவியை செய்ய உங்களை இறைஞ்சுகிறோம்.....

காட்வினுக்கு உதவ... அவனுடைய வங்கி கணக்கு விவரம்
----------------------------------------------------------------------------
Name: GODWIN JAYAPAUL G
Account No : 30790782902
Bank : STATE BANK OF INDIA
Branch: KAPPIARAI
IFSC NO:SBIN0007994
Contact No: 9789874197 ( Martin - His Brother)
---------------------------------------------------------------------------------

பதிவுலக நண்பர்களும், மின்னஞ்சல் குழும நண்பர்களும் முடிந்த அளவு இந்த கடிதத்தை குழுமங்களுக்கும், நண்பர்களுக்கும் அனுப்பி எங்கள் ஏழை நண்பனுக்கு வாழ்வளிக்க கேட்டுக்கொள்கிறோம்.

தோழமையுடன்
ஸ்டாலின், ஹமில்டன், பிரதீப்


தொடர்புடைய பதிவு

Friday, August 14, 2009

ஒரு கிராமத்தானின் கடிதம் - நண்பனுக்கு




மக்கா.... சோமா இருக்குதியளா? பயக்க எல்லாம் சோமா இருக்கானுவளா? ஊரில வேற என்னடே விசேசம்? பேப்பர்லையும், டிவிலையும் பாத்துருப்ப, டெய்லி பண்ணி காச்சல்ல பத்து பேரு செத்து போரானுவளாம். சோக்கேடுனால செத்து போரவனுவள விட இவனுவ கிளப்புற பீதியில பேதி வந்து செத்துருவானுவ போல இருக்கு. இங்க எவன பாத்தாலும் மூக்குல கைய வச்சிக்கிட்டே நடக்கியானுவ. முந்தா நாள் வரைக்கும் மூக்குக்க கிட்ட வந்து துப்பி துப்பி பேசினவனுவ இப்ப கிட்டையே வரல.

"யான வந்தா ஆள கொல்லும், மைரையா பிடுங்கும்னு" இருந்த நமக்கே கொஞ்சம் பேடியாதான் இருக்கு.ஜலதோசத்துல எள்ளு போல மூக்கு ஒழுவுனா கூட பண்ணி காச்சல் வந்துட்டோன்னு பயர வேண்டியது இருக்கு.சரி மக்கா எனக்கு தெரிஞ்ச ரெண்டு, மூணு விசையத்த எழுதியன், நீயும் நம்ம பயலுவ கிட்ட சொல்லு... சரியா??

பண்ணி காச்சல் ஏதோ ஒரு வைரசுனால வருதாம். இந்த சோக்கேடு மொதல்ல பாரின்ல தான் வந்துது, பிறவு பாரின்ல இருந்து நம்ம நாட்டுக்கு வந்த பயலுவளால நம்ம எடத்துல பரவீட்டு இருக்கு. இது காத்துல தும்முனாலோ, துப்புனாலோ பறவுறனால தான் பெரிய மண்ட வேதன.

இங்கேரு... எவனுக்காவது காச்சலோ, பீச்சலோ, மூக்கு ஒளுக்கோ ரெண்டு நாளைக்க மேல இருந்தா ஆசுபத்திரிக்கு போவ சொல்லு. பீடிய குடிச்சிட்டு எங்கேயாவது முக்குல கமந்து கிடக்க போரானுவ. பிறவு ஒஸீல எவனாவது ஓல்ட் மங்க் தந்தான்னு குடிச்சிட்டு கிடக்காதிங்க, இந்த நேரத்துல நல்லதில்ல சொல்லிட்டேன்.

பின்ன ஆசுபத்திரியில பெரிசா கியூ நிக்குன்னு சொல்லியானுவ. இந்த கவன்மன்று காரனுவள நெனச்சா எரிச்சலா இருக்கு. இங்க மனுசன் பேடிச்சு பெய் கிடக்கான், இவனுவ என்னாண்ணா ரெத்தம் எடுக்கியது, டெஸ்ட் பண்ணியதுன்னு நேரத்த ஓட்டிட்டு , சோக்கேடு இருக்கானு நாலு நாளைக்கு சொல்ல மாட்டேங்கிறானுவளாம். என்ன மக்கா செய்யது சும்மாளா சொன்னானுவ "உயிர் பொழைக்கணுமுண்ணா ஒண்ணுக்கு அடிச்சு தான் ஆகணுமுன்னு".

மக்கா சுத்தமா இருந்தா இந்த சோக்கேடே கிட்ட வராதுன்னு சொன்னானுவ. குளத்துல வெள்ளம் கிடக்கனால டெய்லி மூணு நேரம் குளிங்க. பைனியோ, பப்பாளியோ கிடச்சா அடிச்சு சப்புங்க... நேத்து ரேடியோவுல சொன்னானுவ துளசி தின்னாலும் கொள்ளாமுண்ணு.

பிறவு வேற யாதாவது வெவரம் வேணுமுண்ணா கீழ உள்ள நம்பருக்கு போன போடுங்க.
044-24321569, 25305000, 25305723, 011-23061469, 1075 .

இப்படிக்கு
ஒங்க கூட்டுக்காரன்